ஆசியவியல் நிறுவனம்: ஆண்டுவிழாவும் கந்துரையாடலும் தமிழ் விழாவும் – 20.02.24 பிற்பகல்

மாசி 08.2055 ++ 20.02.24 செவ்வாய் பிற்பகல் 3.30 முதல் 7.30 வரைஇடம்: ஆசியவியல் நிறுவனக் கலையரங்கு ஆசியவியல் நிறுவனம்43 ஆவது ஆண்டு நிறைவு விழாஉலகு தழுவிய தமிழ் விழாமொரீசியசு தமிழர்களுடன் கலந்துரையாடல்அயலகத் தமிழர் ஆய்வு மையம் – அடிக்கல் நாட்டுதல்தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை தொடக்கம்கோயில் புராண நூல் வெளியீடுபோதி தருமரும் ஆசியப் பண்பாடும் – சிற்றுரை12ஆவது உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு பங்கேற்புமாண்புமிகு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி மசுதான்வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்கள்முழுமைக்கு அழைப்பிதழ் காண்க

திருக்குறள்மாநாடு – நூற்பதிவு நாள் நீட்டிப்பு

ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ நூற்பதிவு நாள் நீட்டிப்பு அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம். தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org எனவும் தெரிவித்துஇருந்தோம். பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்தும்…

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும், ஐந்தாவது திருக்குறள் மாநாடு, சிகாகோ

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும் ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024)  சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப்…

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோசெரட்டன் இலிசில் நேப்பெர்வில்லி உறைவகம்SHERATON LISLE NAPERVILLE HOTEL

தமிழ் மாநாடும் தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மாநாடும் தமிழக அரசும் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிகழ்ந்து முடிந்தது. போதிய காலமின்மை, போதிய பணமின்மை ஆகியவற்றால் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினாலும் மாநாடு சிறப்புடன் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைவு விழாவின்போது சட்டக்கதிர் சம்பத்து அவர்கள் “அரங்கு நிறைய ஆராய்ச்சியாளர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதே மாநாட்டின் வெற்றிக்கு அடையாளம்” என்றார். அஃது உண்மைதான். பொதுவாகக் கருத்தரங்கம் அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் அமர்வின்பொழுது முழுமையாக இருப்பதில்லை. அல்லது எல்லா  நாள் அமர்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஆனால், இந்த…

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!

11ஆவது உலகத்தமிழ் மாநாட்டு நிறைவு விழா தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக! அரசுகளுக்கு வேண்டுகோள். ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 ஆகிய நாள்களில் சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஆசியவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டின் நிறைவுவிழா நேற்று(09.07.2023 அன்று)  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான்சாமுவேல் தலைமை வகித்தார். வேல்சு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கல்வி…

செம்மொழிச் சிந்தனை : என்னுரை – சி.சான்சாமுவேல்

செம்மொழிச் சிந்தனை : என்னுரை உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ்மொழியினை இணைத்து நோக்கும் என் ஆய்வு முயற்சி 1985-இல் தொடங்கி 1986-இல் ஒரு கருத்தரங்க ஆய்வுக் கட்டுரையாக நல்ல வடிவம் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் எனக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்த நீண்ட தொலைபேசி உரையாடல்களே இந்தக் கருத்துருவின் பிறப்பிற்கு மூல காரணமாக அமைந்தன. 1986-இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் சார்பில் மிகப் பெரியதொரு கருத்தரங்கிற்கு அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் ஏற்பாடு செய்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்…

மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி

புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்: இயக்குநர், ஆசியவியல் நிறுவனம்   [ Dr.G.John Samuel,Founder Director and SecretaryINSTITUTE OF ASIAN STUDIES] சோழிங்கநல்லூர் (அஞ்சல்), செம்மஞ்சேரி, சென்னை – 600 119 மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com தொலைபேசி:   24500831, 24501851 , பேசி:           9840526834 இணையத்தளம்:  www.instituteofasianstudies.com    பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் தலைவர், பன்னாட்டுத் திருக்குறள் நிறுவம், மொரிசியசு   முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. தலைவர், பன்னாட்டு அமைதிக்கான திருக்குறள் நிறுவம் சென்னை

சென்னையில் திருக்குறள் ஆய்வரங்கம்

தை 26, 2050 சனி  09.02.2019 காலை 10.00 மாநாட்டு அரங்கம், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி திருக்குறள் உலகப் பொது நூல்  (Thirukkural as a Book of the World) தொடக்கவுரை :  பேராசிரியர் முனைவர் துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம் ஆய்வுரைஞர்கள்: பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்,மொரிசியசு நீதிபதி ஆர், மகாதேவன் முன்னாள் அரசு செயலாளர்  கிறித்துதாசு காந்தி , முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைசெயலாளர் முனைவர் மூ. இராசாராம் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, பேராசிரியர் க. செல்லப்பன், பேராசிரியர்…

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் கார்த்திகை 11, 20149 / 17.11.2018 மாலை 4.00 இந்தியப் பன்னாட்டு மையம், புது தில்லி (India International centre. Lodhi Road, New Delhi.) புது தில்லியில் புரட்டாசி 06-07, 2049 /   செட்டம்பர் 23 – 24,  2019 நாள்களில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில்…

1 2 5