இதழாளர் இலக்குவனார் தாம் நடத்திய இதழ்கள் வாயிலாக வலியுறுத்தியவை 1.    இனிய எளிய தமிழ் நடை. 2.    அயல்மொழிக் கலப்பால் தமிழ் நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்ந்து பிறமொழிக் கலப்பு இன்றியே எழுத வேண்டும். 3.  இந்தி முதன்மை தமிழுக்கே அழிவு. எப்பாடுபட்டேனும்இந்தி முதன்மையைத் தடுத்தல் வேண்டும். 4.   ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்திய மொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்பட வேண்டும் என விதிக்கும்நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும்…