இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார். தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த…

இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா – சென்னை

  மார்கழி 24, 2048 திங்கள்  08.01.2018 அறிஞர் அண்ணா பொதுநல மன்றம், ஆர்க்காட்டுச்சாலை,  வடபழனி பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் சார்பில் அருட்திரு இயோ.நீலமேகம் தலைமையில் வந்துள்ள இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா

இரீயூனியன் நாட்டுத் தமிழர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும், சென்னை

  பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள் தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து இரீயூனியன்-தமிழக நல்லுறவு குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில் தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர். இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும். இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் மிக்க நன்றி….