தேவதானப்பட்டி ஓடைகளில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் கண்டம்(அபாயம்)  தேவதானப்பட்டி ஓடைகளில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி ஓடைகளைக்கவர்ந்து ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றிஇறைச்சி ஆகிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கள்ளத்தனமாகக் கவர்ந்து கட்டப்பட்ட கடைகளில் இருந்து வெட்டப்படும் ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றின் கழிவுகளை ஓடைகளில் கொட்டி விடுகின்றனர். மேலும் தெற்குத்தெருவிலிருந்து புல்லக்காபட்டி வரையிலும் பன்றி இறைச்சியின் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் கெடுநாற்றம் வீசிக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்களையும், வணிகர்களையும் முகம் சுளிக்க…