தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !

உலகின்    வடிவம்   உருண்டை   என்பதை உருபெரும்  அறிவியலாளர்   கலிலியோ  கூறினார் கலிலியோ    கூற்றை   கண்கண்ட  நாடுகளுக்கு கருத்துரையாகப்   பரப்புரை  செய்தார்   ஆனால் ஈராயிரத்து   ஐநூறுக்குமுன்னே   சீராயிரம்  படைத்த இருவரிமறை  ஆசான்   திருவள்ளுவப்  பெருமகன் உருவான  உலகம்   உருண்டை  என்றே இருவரியிலே   உலகிற்கு   இயம்பினார்   அன்றே ! ”  சுழன்றும்ஏர்ப்    பின்னது   உலகம் ;   அதனால் உழந்தும்    உழவே    தலை ”    என்றாரே படித்தனர்   ஆயினும்    பரப்புரை  செய்தனரா ? பிறநாட்டார்  சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே ! சுழலும்   உலகம்கூட  உழவரின்  பின்செல்லும் நிழலாக  இருக்கிறதென …

இயற்கை எழில் !

வான்மிதந்து  சென்றடையும்  கதிரவனைத் தான்தழுவி  ஒளிஉமிழும்   தண்நிலவில் கண்நிறைந்த  காட்சிகாண  கடல்வெளியில் மண்மீது  படுத்தேன்என்  கண்முன்னே தொங்கிச்  சுழலும்இப்   பூமிப்பந்தில் தங்கிவாழும்  மக்கள்குலம்   தழைக்க பொங்கிவழியும்   அழகுடன்நம்  பூமித்தாய் இங்கிருக்கும்  மக்களுக்கே  படைத்தாள் குறிஞ்சிமுல்லை  குறையாத  மருதத்துடன்நாம் அறிந்த  நெய்தல்பாலை  எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை   அழகுடன்    பார்த்தேன் மூவகைத்   தமிழுடன்   முத்திரைபதித்து பாவகையுடன்  பைந்தமிழ்ப்  புலவர்கள் பாடக்கேட்டேன்  இயற்கை  எழில்பற்றி ! எங்கு   பார்க்கினும்   மக்களெல்லாம் பொங்கும்  மகிழ்ச்சியால்  பூரித்ததையும் வறுமையைப்  புறந்தள்ளி   வாழும் வளமையும்  கண்டேன்  நாட்டில் ! இயற்கை    அன்னை …