எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் மறைவு – தமிழ்ப்படைப்பிலக்கியத்திற்குப் பேரிழப்பு   சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ் படைப்பிலக்கியத்தில் அண்மைக்கால வரலாற்றில் தனித்த முத்திரை பதித்த மிகச்சிறந்த எழுத்தாளர்இராசம் கிருட்டிணன் அவர்கள். களஆய்வு செய்து தொடர்புடைய அந்தப் பட்டறிவுகளைத் தன்னுடைய புதினங்களில் உயிரோட்டமாகப் பதிவு செய்தவர். உப்பளத் தொழிலாளர்கள், மீனவர் சிக்கல்கள் ஆகியவற்றைக் களஆய்வுசெய்து இவர் எழுதிய ‘கரிப்பு மணிகள்’ மற்றும் ‘அலை வாய்க்கரையில்’ புதினங்களும் பீகார் கொள்ளைக்…