அறத்தமிழ்த்  தாயே  உறக்கம்  களைக ! 1. மூத்தமுதற் தமிழ்க்குடியின் முத்தமிழ்த் தாயே !      மூவுலகும் போற்றிடவே முடிபுனைந்த உன்னை நேத்துவந்த ஆரியத்தார் நிலைகுலைத்தல்  கண்டும்     நீருறக்கம் கொள்ளுவது  நன்றாமோ சொல்க பாத்திறத்த   பைந்தமிழ  இனமதனை வீழ்த்திப்     பன்மொழியாய்ப் பல்லினமாய்ப் பாரதனில்   கண்டும் பூத்திருக்கும்  தூக்கமதன்  பூவிழியால் கண்டே     பகைத்தமிழ  ஆரியரைப்  பாரைவிட்டே ஓட்டு ! 2. இனத்தமிழ  இனமதனை  அழிப்பதற்குப் பாரில்     எடுபிடியாம்  சில்லறையை  இணைத்துவைத்தே  இன்பக் கனவுகண்டே  ஆடுவதைக்  களையெடுத்தே  ஓட்டல்     கதிரொக்கும் …