வைரத்தமிழர் க.தமிழமல்லன் வாழியவே!

  உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு புதுச்சேரியில்தி.பி.2047, தைத்திங்கள்(சுறவத்திங்கள்) 2, 3 (16,17.01.2016)ஆகிய நாள்களில் வேல்.சொக்கநாதன் திருமணநிலையத்தில் நடைபெற்றது.   அதில் முனைவர் க.தமிழமல்லனுக்கு வைரத்தமிழர்  என்னும் விருது வழங்கப்பெற்றது.    படத்தில் அவ்விருதை புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி  முனைவர் க.தமிழமல்லனுக்கு  வழங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.   படத்தில் பாரிவேந்தர், இராதாகிருட்டிணன் நா.ம.உ,சேனாதிராசா, நா.ம.உ (இலங்கை)ஆகியோரும் இருக்கின்றனர்.

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு- செருமனி

   உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா   12 ஆவது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் நாள்களில் செருமனியில் நடைபெற உள்ளது.   உலகத் தமிழர் பண்பாடு, கலை,பண்பாடடு, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக   உலகளாவிய தமிழ்க்கல்வி புலம் பெயர் தமிழர்கள் தமிழர் சமயமும் வழிபாடும் தமிழர் நாகரிகமும் தமிழ்க் கலைகளும் தமிழ் மரபுகள்…