மொழிப்போராளிகள் புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 22) மார்கழி 07,2055 *** 21.01.2024 காலை 10.00 தமிழ்க்காப்புக் கழகம் இணைய அரங்கம் மொழிப்போராளிகள்  புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர்,  தமிழ்க்காப்புக் கழகம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் மொழிப் போராளிகளை வணங்குநர் : கவிச்சிங்கம் கண்மதியன் உரைச்சடர் செல்வி ந.காருண்யா செல்வன் மயிலை இளவரசன் நூற்றிறன் அரங்கம் தமிழ்க்களப்போராளி பொழிலன்:…

பொங்கி எழு தமிழா பொங்கி எழு! – கவிச்சிங்கம் கண்மதியன்

  கரைக்காயைப் போன்றிருக்கும் ஈழ நாட்டில் கண்டைக்காய் என நினைத்துத் தமிழர் தம்மை  வெறிநாயாய்க் கடித்திங்கே குதறி மாய்த்தான்! வெந்தணலில் இராசபக்சே குளியல் போட்டான்! அரக்கனந்தக் கொடியவனின் இலங்கை நாடா அமைதிபுத்தன் அறத்தினையும் போற்றும் நாடு? கரைமீதில் எழுந்தகடல் சுனாமி போல கயவனவன் மனிதநேய மாண்ப ழித்தான்! விண்மழையாய்க் குண்டுமழை கொத்துக் கொத்தாய் விழுந்ததடா அப்பாவித் தமிழர் மேலே! புண்மீது நெருப்பானான் இராச பக்சே! புத்தனுக்கே களங்கத்தைச் சேர்த்த ‘கோட்சே’! பெண்டிர்தம் கற்புமங்கே குரங்கின் கையில் பிடிபட்ட மாலையாகிப் பிய்ந்த தாச்சே! கண்விழித்துப் பூமி…