ஆர்கலி  உலகிடை   மார்கழிப்   பெண்ணாள் ஆடிமுடித்தாள்  பின்அவள்  அடிஎடுத்து  வைத்து ” தை தை ” என     நடைபோட்டு  தையலவள்  நடந்ததால் தைத்திங்கள்   பிறந்ததோஅத்     தையே  தமிழ்ப் புத்தாண்டு !   தகுமிகு  முத்தமிழ்   முன்னோர் பத்தாயிரம்  ஆண்டாய்  பழக்கத்தில்  கைக்கொண்ட புத்தாண்டுக்   கொள்கை  பொங்கிய  கடல்பேரழிவில் புதைந்து  போனதை   விதந்தநம்   சான்றோர்கள்கூடி ஆய்ந்து   ஆய்ந்து  அறுபதாண்டின்   முதலாண்டை சிதைந்த   தமிழரிடம்  …