குமுக வளர்ச்சி 3 – முனைவர் இராம.கி.

(சூலை 05, 2015 தொடர்ச்சி) குமுக வளர்ச்சி 3    இந்த வேலிக்கருவையாற்றான் நம்மூர்க் கண்மாய்களுக்கு நீர்வரத்துள்ள கால்கள் அடைபட்டுப் போயின. கண்டதேவிக் கோயிற்குளம் தவிர வேறெந்தக் குளமாவது நம் பக்கத்தில் நிறைந்து பார்த்திருக்கிறீர்களா? சற்று எண்ணிப்பாருங்கள். எப்பொழுது நம் ஊர்க்கண்மாய்கள் நிறையவில்லையோ, அப்புறம் நம்வீட்டுக் கிணறுகளிலும், கேணிகளிலும் நீருற்றுகள் தூர்ந்துதான் போகும். 30-80 அடிவரை இருக்கும் நிலத்தடி நீர்ப்படுகை வற்றிப்போனால் பின் புரைக்கிணறுகளில்(bore-wells) தான் நாம் உயிர்பிழைக்கவேண்டும். அதன் ஆழம் 120 அடிகளிலிருந்து 250 அடிவரை போகும். இப்பொழுதெல்லாம் புரைக்கிணறுகளை 500 அடிகள்வரையும்…

தேவதானப்பட்டிப் பகுதியில் நீர்நிலைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  தேவதானப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் பருவமழையாகப் பொழிந்த கோடைமழையானது பல ஆண்டுகளுக்குப் பின்னர் பொழிந்ததால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பி வந்தன. இந்நிலையில் அளவுக்கு அதிகமாகப் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்தது. இருப்பினும் போதிய வாய்க்கால் அமைக்கப்படாதது, குளங்கள் கவர்வு(ஆக்கிரமிப்பு), குளத்தில் பரவலாக உள்ள கருவேல மரங்கள் இவற்றால் நீர்அதிக…