கவிஞன் – தமிழ்ஒளி

கவிஞன் மோனக் கருக்கலிலே – விண் முத்தொளி தோன்றுகையில் வானக் கடல்கடந்தே – அதை வாங்கிவர விரைவேன்! முத்துப் பனித்துளியில் – கதிர் முத்த மளிக்கையிலே பித்துக் கவிபுனைந்தே – மணம் பேசி மகிழ்ந்திடுவேன்! சாயும் கதிர்களிலே – இருட் சாலம் புரிகையிலே காயும் நிலவெனவே – வழி காட்ட எழுந்திடுவேன்! நீலக் கடல்அலையில் – கதிர் நெய்த வலையிடையே கோலக் குளிர்மணிபோல் – கவி கொட்டிச் சிரித்திடுவேன்! ஊரை எழுப்பிடவே – துயர் ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன் – தமிழ்ச் சாதி…

தமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி

தமிழ்நாடு புதுமை கண்டு வாழ இன்று போர் செயுந் தமிழ்நாடு – மறப் போர் செயுந் தமிழ்நாடு – மிக முதுமை கொண்ட பழமை வீழ மோதிடும் தமிழ்நாடு – வீழ மோதிடும் தமிழ்நாடு! திசையை, விண்ணை, வென்று நின்று சிரித்திடுந் தமிழ்நாடு – எழில் சிரித்திடுந் தமிழ்நாடு – கொடி அசைய உயர மண்ணில் நிற்கும் கோபுரம் தமிழ்நாடு – கலைக் கோபுரம் தமிழ்நாடு! காவிரிநதி பாயுங் கழனிக் கண்ணொளி பெறும்நாடு – முக் கண்ணொளி பெறும்நாடு – பொழில் பூவிரிநறும் புனல்வி…