அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி

இம்மை மறுமையின் – பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை – விளக்கும் தெய்வ நூல் செய்தோன். வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன். தொன்மை நூல்களெல்லாம் – நன்கு துருவி ஆராய்ந்து, நன்மை தீமைகள் வகுத்த நாவலர் கோமான். எதை மறந்தாலும் – உள்ளம் என்றுமே மறவாப் பொதுமறை தந்த – தேவன் பொய் சொல்லாப் புலவன். அறிவின் எல்லை கண்டோன் – உலகை அளந்து கணக்கிட்டோன்;…

அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி

வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ்      மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்      உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்      பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்      நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை      தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்      ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்…