வரன்கொடை கொடுமைக்கு முடிவே இல்லையா?

திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன! மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை   திருமணங்கள்   உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது.   வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி…

பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்

பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்   கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலைகள் பேரிடரில் உள்ளன. இது குறித்துக் கருத்து செலுத்தவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகமோ கவலைக்கிடமாக உள்ளது.   பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் துறைமுகம் உள்ளது. மேலும், எண்ணெய் இயற்கை எரிவளி நிறுவனம்(ONGC),தென்கன்னெய் வேதிய நிறுவனம் (SPIC), முதலான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் கும்பகோணம் வழியாகவும், நன்னிலம் வழியாகவும் தூத்துக்குடி, சென்னை முதலான பகுதிகளுக்கு அனுப்பப் படுகின்றன. எடுத்துக்காட்டாக 4 பாரம்(டன்) ஏற்றிச்செல்லக்கூடிய சுமையூர்திகளில் 8 பாரம்…

புதுச்சேரி-காரைக்கால் வரலாற்றுப் பயிலரங்கம்

    காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, வரலாற்றுத ஆகியன சார்பில் புதுச்சேரி-காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம்(ஆடி 23, 2045 / ஆக.8, 2014) நடந்தது.   கல்லூரி முதல்வர் முனைவர் நா. இளங்கோ தலைமை தாங்கினார். தமிழ்த்துணைப் பேராசிரியர் முனைவர் மாரியப்பன் வரவேற்றார். வரலாற்றுத்துறை தலைவர் பச்சவள்ளி நோக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சாயபுமரைக்காயர் தொடக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சசிகாந்தாசு புதுச்சேரி அரிக்கன்மேடு கண்காட்சியைத் திறந்து…

புதுச்சேரி-காரைக்கால் வரலாறு : ஒருநாள் பயிலரங்கு

  ஆடி 23, 2045 / ஆக.8, 2014     காரைக்கால், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வரும் ஆடி 23, 2045 -8-8-2014 வெள்ளியன்றுபுதுச்சேரி -காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.பயிலரங்கை ஒட்டி அரிக்கமேடு அகழ்வாய்வுத் தடயங்கள் குறித்த அரியகண்காட்சியும் நடைபெறவுள்ளது. வரலாற்று ஆர்வலர்களும் அறிஞர் பெருமக்களும் தவறாது பங்கேற்றுச் சிறப்பிக்கவும். அழைத்து மகிழும்: முனைவர் நா.இளங்கோ, முதல்வர் (பொ), அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி.