தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.   தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நீர்நிலைகள் கிணறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் என அனைத்தும் காய்ந்து கிடந்தன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென சரியத்துவங்கியது. இதனால் பல கிணறுகள் நீரின்றி காய்ந்து போயின. சில கிணறுகள் மூடப்பட்டுவிட்டன.   தேவதானப்பட்டி பகுதியில் 10 அடி முதல் 20 அடிவரை தண்ணீர் தாராளமாக கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் ஆழ்துளைக்கிணறுகள் 200 அடிவரை…