கண் கொண்டு பார்க்கவே கூசும் – அக் காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம் புண்பட உள்ளமும் நோகும் – தேகம் புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும் விண்கண்ட ஓலங்கள் யாவும் – வான வீதியிலே எங்கும் கேட்பது போலும் எண்ணம்  பிரமித்து நிற்கும் – அங்கே என்ன நடந்தது காணவிழைந்தேன் நட்ட நடுநிசி நேரம் – ஒரு நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன் கொட்டும்மழை பெய்தபின்பு – பனி கூதலிடப் புகைபோலும் நிசப்தம் வட்டமதி மேலே நிற்க – அதன் வீசுமொளிதனில் சென்ற இடமோர் வெட்ட வெளிப்பிரதேசம் –…