அருவிக்கரை அன்று கண்ட அருவிக்கரையே! பஃறுளி ஆறாய்ப் பாய்ந்து வந்தாய்; படைத்தவர் தந்த அழகில் மிதந்தாய். வறுமை நீக்கி வாழ்வே தந்தாய்; வட்டாற்றில் கோதையுட் புகுந்தாய்! சிறுவனாக உன்மேல் குதித்தேன்; சீரிய உந்தன் அழகை மதித்தேன். வெறுமை இன்று வீழ்த்தாதிருக்க, விண்ணினீவே, உன்புகழ் பதித்தேன்!   -கெர்சோம்செல்லையா