தமிழனே இது கேளாய் — உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்! கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு! தமிழனே இது கேளாய்! தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு; தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு! கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு. தமிழனே இது கேளாய்! வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார் வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார் நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல…