சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 9  சிவனும்  தென்னையும்   நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும், ஆண்டிக்கும்  வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான் வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும்  நற்றென்னை பாரில்  சிவனுக்கு ஈடு. பொருள் :- சிவன் – தென்னை. 1)இறைவன் புகழ்  நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும். 2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும். 3 ) சிவன் நீண்ட சடைமுடி கொண்டிருப்பான். தென்னையும்  நீண்ட தோகைகளை முடியாகக் கொண்டிருக்கும்….