அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5 பேராசிரியர் வெ.அரங்கராசன் புறச்சான்று – 2 ஒப்பு நோக்குப் பகுதி – இலக்கியச் சான்று: யாயும் ஞாயும் யார்ஆ கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.                                              -செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை, 40. பொருள் உரை: என் தாயும் நின் தாயும் ஒருவருக்கு ஒருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? எத்தகைய உறவின் முறையினரும் அல்லர். என் தந்தையும் நின் தந்தையும் எந்த…