காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம் 7. தொண்டறம்.   1.அற்றார்க்கே ஒன்றாற்றி உற்றாரைப் பேணுதல் கற்றார்க்(கு) உரிய அறம். 2.தொண்டறம் என்னும்நல் தூயதோர்க் கொள்கையைக் கொண்டறம் பேணிவாழ் வோம். 3.எதிர்பார்ப்பே இன்றி இயன்றதைச்செய் அஃதே எதிர்பார்க்கும் தொண்டாம் அறம். 4.கொல்லாமை வேண்டும் உடன்பிறப்பாம் மாந்தரை வள்ளுவன்கோல் கண்ட அறம். 5.விழச்செய்தார் மாயையில் பேதையரைத் தட்டி எழச்செய்வோம் தொண்டறத் தால். 6.மறத்தால் விழவில்லை மாயையில் வீழ்ந்தோம் அறத்தொண்டால் வெற்றிகாண் போம். 7.தடியூன்றித்…

காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்   அதிகாரம் 6. கொள்கை   1.அவனவன் நாட்டை அவனவன் ஆள்தல் இவண்நிலை நாட்டல் இலக்கு. 2.பொதுவுரிமை இல்லாப் பொதுவுடைமை வேண்டோம் இதுபெரியார் தந்த அறிவு. 3.கல்வியுடன் வேலை அனைவருக்கும் கிட்டிடத்தான் செல்வோம் பெரியார் வழி. 4.தொழுதுகை ஏந்திடோம் மாற்றான் இடத்தில் உழுதுபிறர்க்(கு) ஈந்திட்ட நாம். 5.சாதிமதம் மூடச் செயல்கள் அறியாமை மோதி யழித்தல் முடிபு. 6.காதல் கலந்திடல் ஆண்பெண்  தனியுரிமை மோதல் தவிர்த்திடு வோம். 7.பெண்ஆண்…

காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 5. பகுத்தறிவு.   1.அறிவுடன் ஆராய்ச்சி யாண்டும் துணையாய் நெறிகாத்து நிற்கும் நிலைத்து. 2.ஆராய்ச்சி ஆளும் உலகத்தை ஆய்வினைப் பேராட்சி செய்வ தறிவு. 3.மானம் அறிவாம் இரண்டையும் பேணுவோம் நாம்நம் பகுத்துணர் வால். 4.கொடுப்பாரும் கொள்ளாரும் இல்லா உலகைப் படைக்கும் பகுத்தறிவென் பார். 5.முன்னோர் உரைத்திட்டார்  மூத்தோர் வழிமொழிந்தார் என்றேபின் செல்லா திரு. 6.எப்பொருள் எத்தன்மை யார்சொன்னார் கேள்வி எழுப்புநீ வள்ளுவன் சொல். 7.மூடத்…

காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)   காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம்  4. பெரியார் வாழ்த்து.   1.அறியார் வறியார் எளியார்க்(கு) உரியார் பெரியாரைப் போற்றும் உலகு. 2.அய்யா மொழியும் குறள்போல் உலகுக்குப் பொய்யா மொழியாம் புகல். 3.பிறப்பொக்கும் என்றார் சிறப்பினை நம்மை உரைக்கவைத் தார்பெரி யார். 4.குளிர்ப்பேச்சா அன்றுநம் அய்யாவின் பேச்சே ஒளிவீச்(சு) எனநீ உணர். 5.உண்மையைச் சொல்லத் தயங்கா அவர்குணமே வன்மையுள் எல்லாம் தலை.                                                        6.சாதி மதங்களை மோதி மிதித்தவர் நீதி அளக்குமோர்…

காலத்தின் குறள் பெரியார் : 2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் :1 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் : 2  அதிகாரம் 2. வள்ளுவம் போற்றுதல்   அருளே அறிவே அகத்தூய்மை மூன்றன் பொருளே பொதுமறை தான். பிறப்பால் பிரிவை வளர்ப்பார் மறுத்தே அறப்பால் பொழியும்முப் பால். பொறுப்பாய் இருப்பாய் எனத்தான் உரைக்கப் பொருட்பால் பொழியும்முப்  பால். காதலும் காமமும் சேர்ந்தே இசைந்திட வாழ்தலைச் சொல்லும்முப் பால். மொழிஇனம் நாடென்(று) எதையும் மொழியவில்லை வள்ளுவம் கொண்டபெரும் மாண்பு. உறவு மறுத்தல் அறமில்லை ஆண்பெண் உறவினில் வாழும்…

காலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் :2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம் 3. வள்ளுவர் வாழ்த்து.   அறம்பொருள் காமம் பகுத்துத் தொகுத்த திறமதைப் போற்றும்இப் பார். அரும்பாவாய் அஃதும் அறப்பாவாய் ஈந்து பெரும்பேறாய் வாய்த்தாரைப்  பேண். குறும்பா குறள்வெண்பா கொண்டுநாம் உய்யப் பெரும்பா உரைத்தாரைப் பேண். வள்ளுவப் பேராசான் வாய்மொழி வையகம் உள்ளவரை வாழும் நிலைத்து. மானுடம் தான்சுவைக்கத் தேன்குடம் கொண்டுவந்த மானுடன் வள்ளுவனை வாழ்த்து. 6. ஒன்றேமுக் காலடியில் வாழ்வளந்தான் வெற்றியை இன்றுவரை வென்றதுயார் இல்….

காலத்தின் குறள் பெரியார் :1 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் பெரியார் :1  அதிகாரம் 1.நூன்முகம்.   அறிவுறச் செய்தார் பெரியார் அவரைச் செறிவுற ஏற்கும் உலகு. அறிவாசான் சொல்லை அழகுக் குறளில் அறிவிக்கா விட்டால் தவறு. வள்ளுவன் வாய்ச்சொல்லை எண்ணித் துணிந்தேன்நான் தெள்ளுதமிழ் செப்பும் குறள். உள்ளத்தில் உள்ளார் பெரியார் அவரை உலகுக்(கு) உரைக்கும் குறள். உள்ளவரை நல்லமுறை தந்தவரைக் கூறத்தான் வள்ளுவரைப் பின்தொடர்ந் தேன். குறள்வெண்பா கற்றேன் பெரியார் முழக்கக் குரலென்பாக் கூறிநிற் கும். முடியா(து) எனவொரு சொல்லை நினையேல் முடியும் பெரியாரைப் பற்று. பெரியார் நெறியைக் குறள்வழித் தேர…

காலத்தின் குறள் – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் அதிகாரம் 1.நூன்முகம்   1.அறிவுறச் செய்தார் பெரியார் அவரைச் செறிவுற ஏற்கும் உலகு. 2.அறிவாசான் சொல்லை அழகுக் குறளில் அறிவிக்கா விட்டால் தவறு. 3.வள்ளுவன் வாய்ச்சொல்லை எண்ணித் துணிந்தேன்நான் தெள்ளுதமிழ் செப்பும் குறள். 4.உள்ளத்தில் உள்ளார் பெரியார் அவரை உலகுக்(கு) உரைக்கும் குறள். 5.உள்ளவரை நல்லமுறை தந்தவரைக் கூறத்தான் வள்ளுவரைப் பின்தொடர்ந் தேன். 6.குறள்வெண்பா கற்றேன் பெரியார் முழக்கக் குரலென்பா கூறிநிற் கும். 7.முடியாது எனவொரு சொல்லை நினையேல் முடியும் பெரியாரைப் பற்று. 8.பெரியார் நெறியைக் குறள்வழிக் கூற அரிதாய் இருக்குமிந்…