தேவதானப்பட்டியில் என்புமுறிவுக்காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கை

தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் பரவாமல் தடுக்கப் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் பர வாமல் தடுக்கப் பேரூராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் மருமக்காய்ச்சல், என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் பேரூராட்சி நிருவாகம் எடுத்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பரப் பதாகைகள், மிதியூர்தி(ஆட்டோ), உழுவையூர்திகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகத் துண்டறிக்கை வழங்கப்படுகிறது. மேலும் பழைய உருளிக்காப்புகள்(டயர்கள்), தொட்டிகள், ஆட்டு உரல்…

தேனிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

  தேவதானப்பட்டிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முன் எச்சரிக்கையாகச் செய்யப்பட்டு வருகின்றன.. தேவதானப்பட்டிப் பகுதியை இருபிரிவுகளாகப் பிரித்து மருத்துவக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட மருத்துவத் துணை இயக்குநர் காஞ்சனா உத்தரவின்பேரில் சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி   பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் இருந்து காற்பட்டைகள்(டயர்கள்), தேங்கியிருக்கும் கழிவுநீர்க் குட்டைகள், தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்களில் அபேட் மருந்துகளை ஊற்றியும்; திறந்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடக்கோரி விழிப்புணர்வும் செய்து வருகின்றனர். மழைக் காலமாதலின் என்புமுறிவு நோய்…