திருக்குறள் அறுசொல் உரை: 133. ஊடல் உவகை : வெ. அரங்கராசன்

 (திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால்      15. கற்பு இயல்      133.         ஊடல் உவகை  கூடல் இன்பத்தைக் கூட்டும் ஊடல் பற்றிய உளமகிழ்ச்சி.   (01-04 தலைவி சொல்லியவை)   இல்லை தவ(று)அவர்க்(கு) ஆயினும், ஊடுதல்       வல்லது அவர்அளிக்கும் ஆறு. தவறுஇல்லை எனினும், இன்பத்தைக் கூட்டவே, அவரோடு ஊடுவேன்.   உடலில் தோன்றும் சிறுதுனி, நல்அளி       வாடினும், பாடு பெறும். ஊடல்தரும் சிறுதுயரம் வாட்டினும், கூடல் இன்பத்தைப்,…

திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி:தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 132. புலவி நுணுக்கம்  தவறுஇல்லாப் போதும், கூடல்இன்ப மிகுதிக்காக நுட்பமாய்ச் சினத்தல்              (01-02 தலைவி சொல்லியவை) பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர், நண்ணேன், பரத்த!நின் மார்பு. பெண்களின் பார்வைகளால் கற்பினை இழந்தவனே! உன்னை நெருங்கேன்.   ஊடி இருந்தேம்ஆத், தும்மினார், யாம்தம்மை,      “நீடுவாழ்” கென்பாக்(கு) அறிந்து. ஊடலில் தும்மினார், “நீடுவாழ்க”என வாழ்த்துவேன் என்று நினைந்து.   (03-10 தலைவன் சொல்லியவை)  …

திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் :தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால் 15. கற்பு இயல்    131. புலவி தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர், கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும்   (01-05 தலைவி சொல்லியவை) புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும்       அல்லல்நோய் காண்கம் சிறிது.        அவர்படும் துயரைக் காண்போம்         சிறிது; மனமே! நீ வேறுபடு.    1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது       மிக்(கு)அற்(று)ஆல் நீள விடல்.         உணவில் உப்பின்…

திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை   3.காமத்துப் பால்  15.கற்பு இயல்  130.நெஞ்சொடு புலத்தல் ஊடாமல் கூடவிரும்பும் தலைவியின் நெஞ்சோடான உணர்வுப் போராட்டம்.   (01-10 தலைவி சொல்லியவை) அவர்நெஞ்(சு) அவர்க்(கு)ஆதல் கண்டும், எவன்நெஞ்சே!       நீஎமக்(கு) ஆகா தது?        அவர்நெஞ்சு அவரிடம்; என்நெஞ்சே! நீஏன், என்னிடம் இல்லை?   உறாஅ தவர்க்கண்ட கண்ணும், அவரைச்       செறாஅ(ர்எ)னச், சேறிஎன் நெஞ்சு. நெஞ்சே! பொருந்தார்என அறிந்தும், வெறுக்கார்எனப் பின்செல்கிறாய்…

திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல் :  தொடர்ச்சி)    3. காமத்துப் பால் 15.  கற்பு இயல் 129.   புணர்ச்சி விதும்பல்   பிரிந்து கூடிய காதலர், கலந்து இன்புறத் துடித்தல்.   (01-08 தலைவி சொல்லியவை) உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்,       கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு.       நினைத்த, பார்த்த உடனேயே,         மகிழ்விப்பது கள்இல்லை; காதலே. தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும்       காமம் நிறைய வரின்.       பனைஅளவுக் கூடல் ஆசைவரின்,         தினைஅளவும் ஊடல்…

திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி)       3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 128. குறிப்பு அறிதல்        காதலர்  தம்தம்  உள்ளத்துள்ள்         குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல்   (01-05 தலைவன் சொல்லியவை)        கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண்,       உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு. மறைத்தலையும் மீறி, உன்கண்கள் குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன.   கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப்,       பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்கொள்ளா அழகுக் காதலிக்குப் பெண்மை நிறைபண்பே, பேர்அழகு….

திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல்  தொடர்ச்சி) 3. காமத்துப் பால்        15.  கற்பு இயல் 127.  அவர்வயின் விதும்பல்   பிரிவுக் காலத்தில் ஒருவரை ஒருவரைக் காணத் துடித்தல்.   (01-08 தலைவி சொல்லியவை) வாள்அற்றுப், புற்(கு)என்ற கண்ணும்; அவர்சென்ற,       நாள்ஒற்றித் தேய்ந்த விரல். எதிர்பார்த்துக், கண்கள் ஒளிஇழந்தன. நாள்எண்ணி, விரல்கள் தேய்ந்தன.   இலங்(கு)இழாய்! இன்று மறப்பின்,என் தோள்மேல்       கலம்கழியும், காரிகை நீத்து. தோழியே! காதலை மறந்தால், தோள்கள் மெலியும்; வளைகழலும்.  …

திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 125. நெஞ்சொடு கிளத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3.  காமத்துப் பால்    15.   கற்பு இயல்    126.  நிறை அழிதல் மனத்துயரை அடக்க முடியாமல், தலைவி வாய்விட்டுப் புலம்புதல்.    (01-10 தலைவி சொல்லியவை) காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும்       நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணத்தாழ்ப்பாள் கொண்ட கற்புக்கதவைக், காதல்எனும் கோடரி உடைக்கும்.   காமம்என ஒன்றோ? கண்இன்(று),என் நெஞ்சத்தை,       யாமத்தும் ஆளும் தொழில். இரக்கம்இலாக் காதல், என்நெஞ்சை, நள்ளிரவிலும் அடக்கி…

திருக்குறள் அறுசொல் உரை : 125. நெஞ்சொடு கிளத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 124. உறுப்பு நலன் அழிதல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் கற்பு இயல் 125. நெஞ்சொடு கிளத்தல்   பிரிவுத்துயர் மிகுதியைத் தலைவி, தனது நெஞ்சுக்குச் சொல்லுதல்.   (01-10 தலைவி சொல்லியவை) நினைத்(து)ஒன்று சொல்லாயோ? நெஞ்சே! எனைத்(து)ஒன்றும்,       எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! என்துயரைத் தீர்க்கின்ற மருந்துஒன்றைச் சிந்தித்துச் சொல்லாயோ?   காதல் அவர்இலர் ஆக,நீ நோவது,       பேதைமை வாழிய!என் நெஞ்சு. நெஞ்சே! காதலர்க்குக் காதல்தான் இல்லையே! நீஏன் வருந்துகிறாய்?   இருந்(து)உள்ளி…

திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)       திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல்.   (01-07 தலைவி சொல்லியவை)         .      சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,       நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும்.   நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,       பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…

திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்    15. கற்பு இயல் 123.  பொழுது கண்டு இரங்கல்       பிரிந்த காதலர், துயர்மாலைப் பொழுது கண்டு மனம்வருந்தல். (01-10 தலைவி சொல்லியவை) மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும்       வேலைநீ; வாழி! பொழுது. மாலையே நீ பொழுதே இல்லை; பிரிந்தார் உயிர்குடிக்கும் கூர்வேல்.   புன்கண்ணை வாழி! மருள்மாலை; எம்கேள்போல்,       வன்கண்ண தோநின் துணை? மாலையே!  நீஏன் வருந்துகிறாய்?…

திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் : வெ. அரங்கராசன

(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் :  தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல்   தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல்.   (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு,       யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்?   கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு),       உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…

1 2 6