(திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல் :  தொடர்ச்சி)

 

 3. காமத்துப் பால்

15.  கற்பு இயல்
129.   புணர்ச்சி விதும்பல்  

பிரிந்து கூடிய காதலர்,

கலந்து இன்புறத் துடித்தல்.

 

(01-08 தலைவி சொல்லியவை)

  1. உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்,

      கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு.

      நினைத்த, பார்த்த உடனேயே,

        மகிழ்விப்பது கள்இல்லை; காதலே.

  1. தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும்

      காமம் நிறைய வரின்.

      பனைஅளவுக் கூடல் ஆசைவரின்,

        தினைஅளவும் ஊடல் வேண்டாம்.

  1. பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக்

      காணாது, அமையல கண்.

     மதிக்காமல் நடந்தாலும் கணவரைக்

        காணத்தான் கண்கள் துடிக்கும்.

  1. ஊடல்கண் சென்றேன்மன், தோழி! அதுமறந்து,

      கூடல்கண் சென்ற(து)என் நெஞ்சு.

      ஊடுவதற்கே சென்றேன்; உள்ளமோ,

        கூடுவதற்குச் சென்றது, தோழி!

  1. எழுதும்கால் கோல்காணாக் கண்ணேபோல். கொண்கன்

      பழிகாணேன் கண்ட இடத்து.

கண்மை தீட்டும்போது, கோல்காணேன்;

        கணவரைக் காணும்போது, பழிகாணேன்..

  1. காணும்கால், காணேன் தவ(று)ஆய; காணாக்கால்,

      காணேன் தவ(று)அல் லவை.

      காணும்போது, தவற்றைக் காணேன்;

        காணாப்போது, தவற்றையே காண்பேன்.

  1. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்,

      பொய்த்தல் அறிந்(து)என் புலத்து?

      மூழ்கடிக்கும் வெள்ளத்துள் பாய்தல்போல்,

        பொய்த்துப்போம் ஊடல்தான் ஏனோ?

  1. இளித்தக்க இன்னா செயினும், களித்தார்க்குக்

      கள்அற்றே கள்வ….!நின் மார்பு.

       இழிதுயர் செய்தாலும், கள்ளையே

        விழைவார்போல், எனக்கு உன்மார்பு.

       (09-10 தலைவன் சொல்லியவை)

 1289. மலரினும் மெல்லிது, காமம்; சிலர்,அதன்

      செவ்வி தலைப்படு வார்.

      மலரைவிடக், காதல் மெல்லியது;

        சிலர்தான், பதம்உணர்ந்து நுகர்வார்.

  1. கண்ணின் துனித்தே கலங்கினாள், புல்லுதல்,

      என்னினும் தான்விதுப்(பு) உற்று.

     கண்களால் ஊடித் தழுவுதற்கு,

        என்னைவிடப் பெரிதும் துடித்தாள்.

பேரா.வெ.அரங்கராசன்