திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா ஒளிப்படங்கள்

தை 24, 2047 /  பிப். 07, 2016 திருவண்ணாமலையில் திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்கம் 100, மொழிப்போர் 50, மொழிஞாயிறு பாவாணர் 114 ஆகிய   முவ்விணை விழாவின் பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள்.  தலைமை:  முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார்  நன்றியுரை:  கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!]

உதவிக்காக ஏங்கும் திருவள்ளுவர்! – தமிழ் இராசேந்திரன்

  தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில் ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர் ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுடன் 482/500 என்ற அளவு மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி வந்தது.   இந்நிலையில் அருகில் புதிதாகத் தோன்றிய ஆங்கில வழிப் பள்ளி நிருவாகத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நயவஞ்சகமாக…