மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! –  தி.வே.விசயலட்சுமி

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவச் சிகிச்சை அளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் சிற்றூர்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது. இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி…

ஒற்றுமையால் ஒடுக்குவோம்! – தி.வே.விசயலட்சுமி

ஒற்றுமையால் ஒடுக்குவோம்!   குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றே என்பர். குழந்தைகளும், தெய்வச் சிலைகளும் திருடப்படுவதும், விலைக்கு விற்கப்படுவதுமாகிய நிகழ்வுகள் நாடெங்கும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற குற்றங்கட்குத் தண்டனை விரைவில் கிடைத்து விடும் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாமற் போனது. அண்மையில் மதுரை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்திரா என்ற ஐந்து அகவைச் சிறுமி, அரசு மருத்துவ மனைமுன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஐந்து பேர் கொண்ட குழு அக்குழந்தையைக் கடத்திச் சென்று மகப்பேறு இல்லாத் தம்பதியருக்கு விற்று விட்டதாகவும் அறிந்தோம். காவல்துறை நடவடிக்கை சரியின்மையால் சென்னை…

மாற்றுத் திறனாளிகளைக் காப்போம் – தி.வே. விசயலட்சுமி 

  மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்!   உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் அருவினையை/சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அருவினைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர். கண்பார்வையற்ற கிரேக்கக் கவிஞர் ஓமர், இலியம், ஒடிசி போன்ற காவியங்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றனர். தமிழகத்தில் அந்தகக்கவி வீரராகவர் போன்ற எண்ணற்றோர் தீந்தமிழ்ப் பாக்களைத் தீட்டியுள்ளார்.   பார்வையற்ற, காது கேளாத, பேச வியலாத பெண்மணி எலன் கெல்லர் ஆடம் என்ற அமெரிக்க…

தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு

 சித்திரை 11, 2048 திங்கள் ஏப்பிரல் 24, 2017 மாலை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004    

சல்லிக்கட்டா? ‘ஜ’ல்லிக்கட்டா? – தி.வே. விசயலட்சுமி

  சல்லிக்கட்டா? ‘ஜ‘ல்லிக்கட்டா?     தமிழர் திருநாளான பொங்கல் விழாவை ஓட்டித் தமிழகமெங்கும் சிற்றூர்ப் புறங்களில் பல்லாண்டுகளாய் நடந்து வரும் வீர விளையாட்டே சல்லிக்கட்டு என்பது. தமிழர்தம் முல்லைநில நாகரிகத்தில் பெண்ணை மணக்க விரும்பும் ஆடவர். மணப்பெண்வீட்டாரின் காளையை அடக்கி மணப்பர் என்று சங்க இலக்கியம் கொண்டு அறிகிறோம். இன்று இவ்வீரவிளையாட்டு திருமணத்துடன் உறவு கொள்ளாமல் இளைஞர்தம் மறப்பெருமையைப் பாரோர்க்கு எடுத்துக்காட்டும் ஒன்றாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய கட்டுத்  தொகை முடிவு செய்யப்படும்….

உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு

உலகத்திருக்குறள் மையம் திருவள்ளுவர் திருநாள் விழா உயராய்வு எழுச்சி மாநாடு தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 காலை 7.00 முதல் மாலை 5.00 வரை வள்ளுவர்  கோட்டம், சென்னை காலை 7.00 திருக்குறள் முற்றோதல் காலை 8.30 சிற்றுண்டி காலை 9.00 நூல்கள் வெளியீடு நூலாசிரியர்கள்: திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் திருக்குறள் செல்லம்மாள் திருக்குறள் தி.வே.விசயலட்சுமி வெளியிடுநர் : இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் ப.தாமரைக்கண்ணன் முனைவர் பா.வளன்அரசு வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு முற்பகல் 10.30  அறக்கட்டளைச்…

தமிழ்நிதி விருது வழங்கும் விழா

தமிழ்நிதி விருது  வழங்கும்  விழா     கம்பன் கழகமும் இலக்கிய வீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இனைந்து பாரதீய வித்யாபவனில்மார்கழி 19, 2047  செவ்வாய் சனவரி 03, 2017 அன்று   தமிழ்க்கூடல் தனிப்பாடல் நிகழ்ச்சி நடத்தின. இவ்விழாவில் தமிழ்நிதி விருதுவழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.   தலைமை தாங்கிய மேனாள் அறநிலையத் துறை அமைச்சரும், கம்பன் கழகத் தலைவருமான அருளாளர் திரு.இராம வீரப்பன்,  புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “தமிழ் நிதி” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தார்.   தலைவர்தம் உரையில் புலவர் தி .வே.விசயலட்சுமி,  திருக்குறள்,…

பெண்களே கண்கள்! – தி.வே. விசயலட்சுமி

பெண்களே கண்கள்! – தி.வே. விசயலட்சுமி   அரசியல், நீதி, மருத்துவம், காவல், ஆசிரியர், விளையாட்டு என்று பல்வேறு துறைகளிலும், அறிவியல் நுட்பத்திலும் தம் தடம்பதித்து நாளுக்கு நாள் மகளிர் பெருமை வானளாவ ஓங்கி நிற்கிறது. ஆனால் பெண்ணினத்தை இழிவு செய்யும் மடமை முற்றிலும் அழிந்தபாடில்லை. இரண்டு பெண் குழந்தைகட்கு மேல் மூன்றாவது பெண்ணாகப் பிறந்து விட்டால் அதை நஞ்சூட்டிக் கொன்று விடும் நச்சுமனிதர்களை நாளும் ஊடகங்கள் இதழ்கள் வாயிலாக அறிந்து மனம்பதைக்கிறோம். தமிழக அரசு, தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற பல சீரிய…

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி

(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16.20 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25   நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக் கல்லார் அடையார் களிப்பு.   அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும் பண்பும் குறளால் பெறு.   23.  வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர். உள்ளுவர் நல்வினை ஓர்ந்து.   24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர். துன்பம்  தவிர்த்துவாழ் வார்.   25. வையத்து வாழ்வாங்கு  வாழ்ந்திடக் கற்றிடுவோம் தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து. தி.வே.விசயலட்சுமி   பேசி –…

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 2/2 – புலவர் தி.வே. விசயலட்சுமி

(தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 தொடர்ச்சி) தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள்  2/2 தொல்காப்பியர் கூறும் இல்லறப்பயன்      காமஞ்சான்ற கடைக் கோட் காலை ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல் – கற்பியல் – 1138)         காமம்  நிறைந்த உறுதியான காலத்தில் நலம்சிறந்த மக்களோடு சுற்றமொடு கூடி இல்லறம் புரிந்து சுற்றமொடு தலைவனும் தலைவியும் விருந்தோம்பலை இடையறாது செய்து வாழ்தலே கற்பின் பயன்  என்று முனைவர் வ.சுப. மாணிக்கம்…

நல்லதோர் வீணை செய்தே… – தி.வே. விசயலட்சுமி

நல்லதோர் வீணை செய்தே… நாட்டு விடுதலையைத் தன் உயிர்மூச்சாகக் கருதி, வீர விடுதலை வேண்டி, வேறொன்றும் கொள்ளாது நின்ற மகாகவி பாரதியார், விடுதலையை மாற்றாரிடமிருந்து பெறுமுன், இந்திய இனம் பெண்மைக்கு விடுதலை அளிக்க வேண்டுமென விரும்பினார். பெண் விடுதலை இயக்கம் உருவானது. பாரதியார் “பெண்மை வெல்க” எனக் கூத்திட்டார். “பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை” என்று எடுத்துக்கூறினார். சக்தியும், சிவனும் இணைந்து செயற்பட்டால் வெற்றி பெறுவது திண்ணம் என உணர்ந்து, விடுதலைப் போராட்ட வேள்வியிலே பெண்ணினத்தை ஈடுபடுத்த வேண்டினார். “ஆணுக்குப்…

மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு 2/2 தி.வே.விசயலட்சுமி

மன அமைதிக்கு மருந்து : நூல்களின் பங்கு 2/2   சிறந்த அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மாமேதை சாக்ரடீசுக்கு மரணத் தண்டனை அறிவிக்கப்பட்டது. இளைஞர்களைச் சிந்திக்க வைத்த அந்த மேதை நஞ்சு அருந்தி இறக்க வேண்டும் என்பது தண்டனை. சாக்ரடீசு அதற்காகக் கவலைப்படவில்லை. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவந்தது. சிறையில் இருந்த சாக்ரடீசு அந்நாட்டின் ஒரு கவிஞர் எழுதிய கவிதைகளைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். அனைவரும் வியந்து அவரிடம் படிப்பதற்கான காரணத்தைக்…