நான் சற்றுத் தூங்கிக் கொள்கிறேன்.. – முகமதுபாட்சா‬

நான் சற்றுத் தூங்கிக் கொள்கிறேன்… எனக்கான தூக்கத்தை யாரும் கெடுத்து விடாதீர்கள் ! ஆசையைத் துறந்த யெனக்குத் தூக்கத்தைத் துறக்கத் தெரியவில்லை ! தூங்கும் போது – நான் தியானிப்பதாகவே பொய்ச் சொல்லிக் கொள்கிறேன்! குடும்ப வாழ்வை நேசித்த வரை தூக்கத்தைத் தொலைத்திருந்தேன்! ஆசையைத் துறந்த பிறகுதான் தூக்கம் நிம்மதியாக வருகிறது! ஆசையில் தூக்கம் அடங்குமா? தெரியவில்லை ! – ஆனாலும் தூங்கித்தான் ஆக வேண்டும்  ஒரேயடியாகத் தூங்கும் வரை! முகமதுபாட்சா

பிரான்சு கம்பன் மகளிரணியின் முத்தான கவிதை மூன்று

பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்?     மரபுக் கவிதையைச் சுவைப்போர் குறைந்து வருவதும், அதைப் புரிந்து கொள்வோர் அருகி வருவதும் கண்கூடு. தொன்று தொட்டு வரும் கவி அரங்கம் அல்லது கவி மலர் என்கிற பாணியில் மக்களைச் சலிப்புற வைப்பதற்கு மாற்றாக அவர்கள் ஊன்றிக் கவனிக்கும் வகையில் அவற்றை அளித்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடே கடந்த இரு வருட மகளிர் விழாவில் முன் வைத்தக் கவிதைகள். சென்ற வருடம் “வினா-விடை” முறையில் ஒரு கவிஞர் கேட்கவும், மற்றொருவர் விடையளிக்கவும் வைத்த உத்தி…