உங்கள் ‘தேசிய’த்தில் சென்னை இல்லையா?   மழை எவ்வளவோ அசிங்கங்களை வெளிக்கொண்டு வருவதுபோல ஊடகங்களின் அரசியலையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தைப் பெருமளவில் பாதித்த – குறிப்பாகச் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் முதலான மாவட்டங்களில் பெய்த – கனமழையும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளமும் சேதங்களும் வட இந்திய ஊடகங்களின் கவனத்துக்குச் சென்றதாகவே தெரியவில்லை.   “வட இந்திய மாநிலங்களில் நிகழும் எந்தச் செய்தியானாலும் பரபரப்பாக வெளியிடும் ஆங்கிலம், இந்தி அலைவரிசைகள், செய்தித் தாள்கள் சென்னை வெள்ளத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. சீனா போரா கொலை…