கொடுமை செய்வோர் வாழ்கின்றார்! – கெருசோம் செல்லையா

கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!   கொன்று, திருடி, ஏமாற்றி, கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!. இன்று இவரைப் பாராட்டி ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார். அன்று இறைவன் உரைத்திருந்தும், அவற்றை மறப்போர் வீழ்கின்றார். நன்று எதுவென உணர்பவர்தான், நன்மை வழியில் மீள்கின்றார்!   – கெருசோம் செல்லையா  

மலைபோல் பற்று எனக்கில்லை! – கெருசோம் செல்லையா

மலைபோல் பற்று எனக்கில்லை! மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும், மாபெரும் பற்றும் எனக்கில்லை. கலையழகுள்ள சிலைபோல் கட்டும், கைத்திறன் அறிவும் எனக்கில்லை. விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும், விண்ணின் அன்பும் எனில் இல்லை. இலைபோல் கருகும் இவ்வாழ்வைக் காட்டும், இறைமுன் வந்தேன், குறையில்லை! – கெருசோம் செல்லையா