பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்   பகலவனே ! – பழ.தமிழாளன்

பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்                     பகலவனே ! 1. மனுநூலை  நம்பவைத்து  மக்களையே             மடமைதனில்  ஆக்கி  வைத்த     மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத்          தோலுரித்த மாண்பின்  மிக்கோன் பனுவலெனும்  வேதத்தின் முடக்காற்றை           மணக்காதே  வைத்த  பெம்மான்      பிறப்பதனில் சாதிகண்டு  பரமனுச்சி                    அமர்ந்திருந்த  ஆரி  யத்தை நுனிநாவாம்  பகுத்தறிவின்  அம்பாலும்                     கோலாலும்  வென்ற  வீரன்       நற்றமிழத்  தன்மானம்  பகுத்தறிவால்              ஆரியத்தை விரட்டி  வைத்தோன் தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின்                        மூச்சுக்காற்  றாக  மாறித்   …

திராவிடம் என்பது ஆரியல்லார் என்பதன் குறியீடு! – குளத்தூர் மணி

திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்! ‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் குளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள மறுமொழிகள். பகலவன்: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதைப்பற்றிய நிறை குறையைப் பகிர வேண்டுகிறேன்! குளத்தூர் மணி: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம். பகலவன்: ஆந்திர, கருநாடக, கேரள மாநிலத்தவர்கள் தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்துவது…