நோய்பரப்பும் பன்றிகளைப் பிடிக்கும் தேவதானப்பட்டி பேரூராட்சி

தேவதானப்பட்டி பேரூராட்சியில் நோய்களைப் பரப்பும் பன்றிகளைப் பிடித்த பேரூராட்சி தேவதானப்பட்டி அருகே உள்ள சாத்தாகோவில்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளிலும் அல்அமீன் நகர் பகுதியிலும் நோய்களைப் பரப்பக்கூடிய பன்றிகள் உலாவருகின்றன.  இதனைக் கட்டுப்படுத்தவேண்டும் எனப் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர்  காவல்துறையும் பேரூராட்சி நிருவாகமும் பன்றிகளை வளர்ப்பவர்கள் தாமாக முன்வந்து பன்றிகளை அப்புறப்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்தன. இருப்பினும் பன்றிகளை வளர்ப்பவர்கள் தொடர்ந்து வளர்த்து வந்தனர். அதன்பின்னர் பன்றிகளை வளர்ப்பவர்களுக்குப் பேரூராட்சி சார்பில்   எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து வளர்த்து வந்ததால் பேரூராட்சி நிருவாக…

தேனிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் (டெங்கு) பரவும் பேரிடர்

தேனி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் என்புமுறிவுக் காய்ச்சல் பரவும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. குள்ளப்புரம், மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, புதூர் முதலான ஊர்களில் ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. மேலும் குள்ளப்புரம் ஊராட்சியில் ஊராட்சிச் செயலாளர் இல்லை. ஏற்கெனவே இருந்த ஊராட்சிச்செயலாளர் பதவி உயர்வு பெற்று மாறுதலாகிவிட்டார். இதனால் ஊராட்சியில் எந்த வித மக்களின் அடிப்படைச்சிக்கல்களும் கவனிக்கப்படவில்லை. மேலும் குடிநீர், சாக்கடை வசதி, மின்வசதி எதுவும் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்….