பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் : 01

   ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற தொடருக்கேற்ப தெய்வத்திற்கு முன்னர் குருவை மூன்றாம் இடத்தில் வைத்துப் பண்டைய காலத்தில் குருகுலக்கல்வியிலிருந்து கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் ஆங்கில மோகத்தின் காரணமாக நாம் நம்முடைய குழந்தைகளைப் பதின்நிலைப்பள்ளி(மெட்ரிக்குலேசன்,) மத்தியக்கல்வி வாரியம்(சி.பி.எசு.இ) எனப் பல வகையான பள்ளிகளில் சேர்த்து வருகின்றோம். இதனைப் பயன்படுத்தி பள்ளி – கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை அடிமையாக்கியும், மாணவ, மாணவிகளைக் கொத்தடிமை போலவும்நடத்தி வருகிறார்கள். விளைவு பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் பாதி மனநிலை பாதிக்கப்படும் நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளப்படுகிறார்கள். பணங்காய்ச்சி…

பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட முதல்வர் கடும் எதிர்ப்பு

பள்ளிகளில், சமற்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் செயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அதற்கு மாற்றாக, அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பரம்பரை அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்’ என, அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து, அவர் தலைமையாளருக்கு எழுதியுள்ள மடலில், மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி – எழுத்தறிவுத் துறையின் செயலர், ஆகத்து, 7 ஆம் நாள் முதல், 13 ஆம் நாள் வரை, சமற்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, மடல் எழுதியுள்ளதை அறிந்தேன்….