ஈழத்தாய்க்கு அகல் வணக்கம். பெண் எனும் பெருமை பெற்று மனைவி எனும் உரிமை கொண்டு பெற்றாயம்மா புலி எனும் வேங்கையை! இல்லறத்தில் இனியவளாக ஈழத்தின் தாயாக வாழ்ந்து விடைபெற்றீர்கள் இந்நாளில் தாய் கன்றோடு பசி மறக்க நீங்களோ சேயை சேவைக்காக அனுப்பினீர்கள் ஈழத்தின் விடிவு காண பெற்றவள் மனம் கல்லானதோ இல்லை பெரும் ஈக மனம் அம்மா உங்களுக்கு! பிரபாகரன் எனும் தலைவன் பெயர் உச்சரிக்க எமக்குத் தானமாகத் தந்தீர்கள் புலியாகச் சேயினை! கொடு நோய் உங்களை அழைக்க இந்தியக் கொடுங்கோல் உங்களை அவமதிக்க…