பாய்புலியே! எங்கே உன் சீற்றம்? இன்னமும் எத்தனை யாண்டுகள் தமிழா இங்ஙனே உணர்வற்றிருப்பாய்? – நீ இங்ஙனே உணர்வற்றிறிருப்பாய்? தின்னும் இனப்பகை உன்றனை மாய்த்தது, தீராத மடமைநின் இனத்தையே சாய்த்தது, மன்னும் அடிமையா வாழ்வென வாய்த்தது? மாளாத துயரையா உன்மரம் காய்த்தது? எந்தமிழ் மொழிபேணி வருகநீ யாண்டும், இழந்தநின் பேராற்றல் எழ, அது தூண்டும்! வெந்திறல் ஆண்மையொடு நீஎழல் வேண்டும்! வீழ்கின்ற பகையோடு அடிமையுனைத் தாண்டும்! வடவர்க்குத் தமிழ்நாடு வாழும்பட் டயமா? s வல்லதோ ரடிமைக்கு வேண்டும் நயமா? மடமைக்குத் தமிழ்நாடு மீன்மேயும் கயமா?…