தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – தமிழரசி

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்] நாரதர்: சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா! முருகன்: நாரதர் வருகிறார் பின்னே! தாரகம் வருகிறது முன்னே! ஏதோ சிறப்பு இருக்க வேண்டும். பார்வதி: நாரதர் பூலோகம் சென்றிருப்பதாக வாணி கூறினாள். முருகன்: பூலோகமா? அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா? சிவன்: [சிரித்து] முருகா!…

பார்வதித்தாயே! பார் வதியும் தாய் நீயே! -செந்தமிழினி பிரபாகரன்

தாய் என்ற சொல்லுக்கே தாயே நீ தானே? தாளாமல் அழுகின்றோம் தாயே வருவாயே! வீரத்தின் இலக்கணத்தைப் பெற்றெடுத்த பெரும் பேறே பார் போற்றும் பார்வதியே! பார் வதியும் தாய் நீயே! பேரெடுத்த பிள்ளை தனை மடி ஏந்திய தமிழ்த் தாயே.. இன வலி சுமந்து நீ பட்ட பாடு… வரலாறு பாடும்.. விழி நீர் சுமந்து என்றும்! உற்ற துயர் புற்றெடுக்க வெற்றுடலாய் உணர்விழந்து உலகெல்லாம் உறவாட உறவிழந்து உயிர் வாடினாய் பட்ட பாடு போதுமம்மா போய் வாடி தாயே! கொடியோர் முன் உயிர்…

தகவல், தொடர்பாடல் நுட்பப் (ICT) பயிற்சி

விக்கிபீடியர்களுக்கான பயிற்சி கடந்த ஒரு மாதமாகத், தமிழ்நாட்டின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் (SCERT) மூலமாகத் தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தகவல்,  தொடர்பாடல் நுட்பப் (ICT) பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50 ஆசிரியர்கள் என்று மொத்தம் 1500 ஆசிரியர்கள் மூன்று நாட்களுக்கு இப்பயிற்சி பெறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒரு முழு நாள் முழுதும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆசிரியர்கள் பங்களிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.   மா.க.ஆ.ப.நி.(SCERT) நியமித்த பயிற்றுநர்களுடன், சேலத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும்…