விண்ணில் மிதக்கும் விண்முகில்போல் விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல்  கண்ணின் பார்வை தொலைநோக்கக்   காணும்  உலகம் விரிந்தோடத்  தண்ணீர்  மீதின் காட்சிகள்போல்  தளிர்ந்து  மனத்தில்சஞ்சரிக்க  என்னுள்  வாழ்ந்து எழுச்சியுறும்  இறந்த  கால நினைவுகளே ! பள்ளிப்  பருவ நாளங்கே ! பாடித்  திரியும் நண்பரங்கே ! சொல்ல இயலாச் சிரிப்பங்கே ! துயரம்  தாளா மனதங்கே ! செல்லம் கொடுக்கத்  தாயங்கே ! சிந்தை ஊக்கும் தந்தையங்கே !  உள்ளம் என்னும் உலகினிலே உலவித் திரியும் நினைவுகளே ! இன்ப துன்ப நினைவெல்லாம்  இறந்த  காலமனச்சின்னம் !  இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை  எளிதாய்  முடிக்கவழிக்காட்டி !  என்றும்…