தமிழகப் புலவர் குழுவின்  107 ஆவது  கூட்டம்  கிருட்டிணன்கோவில் நகரில் உள்ள  கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில்,  கோலாகலமாக  நடந்தேறியது. பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 காலை  10.00 மணியளவில்  தமிழ்த்தாய் வாழ்த்துடன்  கூட்டமானது  தொடங்க, கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் க.சிரீதரன் வரவேற்புரையாற்றினார்.   புலவர் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில்  தலைவர்,  செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாண்மைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புலவர் குழுவின் தலைவராக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், துணைத்தலைவராக இதுவரை செயலாளராகப்பணியாற்றிய, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,  செயலாளராக  முனைவர்  மறைமலை இலக்குவனார்,…