கேப்பாபுலவு போராட்டத்தினை அனைத்துநாட்டிற்கும் கொண்டு செல்லும் புலம்பெயர் இளையோர், மக்கள்   முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் நிலை கொண்டிருக்கும் படையினரை  அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக்கோரி கடந்த 20 நாட்களாகத் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். மக்களின் முறைமையான(நியாயமான) கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் நல்லாட்சி அரசாங்கம் எனத் தம்மைத்தாமே கூறும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. பல மிரட்டல்களுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை…