சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்! பார்த்துப் பறித்த தாமரைப்பூத் தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன் பூத்த முகத் தாமரையாள் புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து….. தேவையடி தாமரை இதழ் என்றேன் தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு பூவைக் காட்டிப் சேர்சொல் என்றேன் பூவை “என்பேர் பூவை” என்றாள்! ஆவல் அற்றவன் போல் நடந்தேன் அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து…. காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து – பலர் கண்பட வாடிய மருக்கொழுந்து நீ…