மசுகட்டுத் தமிழ்ச் சங்கம் மகளிர் மட்டுமே கலந்துகொண்ட ‘பூவையர் பூங்கா’ எனும் ஒரு நாள் நிகழ்ச்சியை மசுகட்டு வாடிக்கபீரிலுள்ள, கிறிசுடல் சூட்டு உறைவகத்தில் சித்திரை 22, 2046 / மே 5, 2015 அன்று நடத்தியது.  இந் நிகழ்ச்சியில், வெள்ளித்திரை- சின்னத்திரை நடிகை நளினி, மகளிர் புற்றுநோய் மருத்துவர் மரு. சுமனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்!   ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எனக் கூடியிருந்த பெண்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் என்றால் மிகையாகாது! அழகிப் போட்டியில் தொடங்கிய நிகழ்ச்சி, சொல் விளையாட்டு,…