பெண்ணை மடல் மா பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌ எருக்கம் சூடி உருக்கம் பயின்று ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌ இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே! தகரக்கூந்தல் கனலன் குரலென‌ கூரிய வீசும் அவள் நிலை அறியா புல்லியக்கல்லா நெடுமகன் போல மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌ அவள் பயிர் மடமே உணரா நின்று உகுத்தனை என்னே விரிஉளை அலரி. தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி. குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள் செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை நெடுமா தொலைச்சிய‌ செல்தி!…