தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ]  தொடர்ச்சி)                        தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   நெல்லையில் பணியாற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் அடுத்து விருதுநகர் செந்திற்குமாரநாடார் இந்துக்கல்லூரியில் (10.08.47 அன்று) தமிழ்த்துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்தார்; இக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பின்மையால் இளங்கலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். கல்லூரியிலும் தமிழ் அமைப்புகள் மூலமாக நகரிலும் தம் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்தார் பேராசிரியர்.   “பேராசிரியர் (சி.இலக்குவனார்) சென்ற இடங்களில் எல்லாம் தமிழ்த் தொண்டே நிகழ்ந்தது. தமிழுக்கு மறுமலர்ச்சி…

தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம் – தமிழ்சிவா

தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம்   பெரியாரே!  பெரியாரே! நீங்களோ ஓயாமல் படித்தீர்கள் ஆளும் உங்கள் சீட சிகாமணிகளோ ஓயாமல் நடிக்கிறார்கள். இது எந்தச் சித்தாந்தில் வரும்? முன்னணி  என்று பெயர் வைத்தவனெல்லாம் மானுட  இனத்தையே பின்னணிக்கு இழுக்கின்றான் இங்கே நந்தினிகள் மீண்டும் மீண்டும் கூட்டு வல்லுறவில் கொல்லப்படுகிறார்கள் ஏலம் விடப்பட்ட நீதிதேவதை பணக்காரர்கள் வீட்டில் பற்றுப் பாத்திரம் தேய்த்து ஈட்டிய வருமானத்தில் வாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கேட்டு வழக்குத் தொடுத்தாள்bgupah தள்ளித் தள்ளி வைக்கப்பட்டதில் வயதாகிப்போனதால் முதியோர் உதவித்தொகை கேட்டும் கையூட்டில்லாமல் கிடைக்காத நிலையில் சிலபல  ஆண்டுக்கு…

தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை! – எழில்.இளங்கோவன்

தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை!    கீழ்வானக் கடல்முதுகில் கிளம்பும் நெருப்புக் கோளத்தின் கதிர்விரியக் கிழக்கு திக்கும்! ஆழ்கடலின் முத்துகள் ஆடும் கொற்கை அரியணையில் தமிழ்வீற்று ஆளும் கூடல்! வாள்பறக்கும் படைகிளம்பும் வெண்ணி தொட்டு வான்முட்டும் இமயத்தை வாளால் தொட்டார்! தாள்தொட்டார் இல்லையெனத் தமிழர் கூட்டம் தோள்தொட்டார்; தைப்பாவாய் தோளே தொட்டார்!   ஆரியத்தால் வீழ்ந்தோம்நாம்! அன்று சொன்ன ஆதிவேதம் புராணக்கதை அங்கே வீழ்ந்தோம்! போரிட்டால் வென்றிருப்போம்; பூனூல் தொட்டுப் பேரமைச்சே! இராசகுரு! போற்றி என்று வேரற்ற மரம்போல வீழ்ந்தோம் அங்கும்! வகுத்துரைத்தான் நால்வருணம் வீழ்ந்தோம் அன்றும்! தாருற்ற தைப்பாவாய் தோல்வி யில்லை திராவிடத்தால் எழுகின்றோம் தோற்ப தில்லை!   திராவிடத்தால் எழுந்தோம்நாம் தேட்டை செய்யும் தறுக்கரைநாம் திராவிடத்தால் தள்ளி வைத்தோம்! “ஆரடாநீ சாதிசொல்ல? அற்ப மூடன் ஆரடாநீ பெண்ணினத்தை அடிமை யாக்க? ஆரடாநீ மனுவாதி? அவனின் நூலை அனலிட்டுக் கொளுத்துங்கள்; அறிவும் மானம் தேறப்பா” ஈரோட்டில் தெறித்தார் தந்தை தைமகளே தமிழியத்தால் தகர்ப்போம் பகையை!   தமிழியம்தான் ஆரியத்தைத் தோற்க டிக்கும் தமிழியமே ஆரியமாய்த் தோன்றா மட்டும்! தமிழகத்தில் மதவாதத் தலைமைக் காகத் தமிழரிடம் சாதிவெறி தலைவி ரிக்க இமைகொட்டா விதைக்கிறது இந்துக் கூட்டம்; எதிர்த்திடுவோம்! பெரியாரின் இடது சாரித் தமிழியம்தான் பெருநெருப்பு; தமிழர் மானம்! தைப்பெண்ணே! தமிழ்க்கண்ணே! தமிழால் வாழ்த்து!   வாமகளே தைப்பாவாய் வா!வா! உன்னை வாழ்த்துகின்ற தமிழரைநீ வந்து வாழ்த்து! மாமகளே! தமிழ்ப்பிறப்பே! மலர்கண் தேனே! மாவிலையும் செங்கரும்பும் மழலைக் கூத்தும் கோமகளின் வளையிசையில் குலுங்க; வாசல் கோலத்தில் புதுப்பானை; கொதிக்கும் பொங்கல்; வாமகளே தைப்பாவாய்! வந்து வாழ்த்து! வளம்பெருக நலம்சிறக்க வாழ்த்து பாவாய்!   எழில்.இளங்கோவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்   [ஙோ] 3. தமிழ்நலப் போராளி  இந்நூலைத் தொடர்ந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், மொழியியல் குறித்த தமிழ், ஆங்கில ஆராய்ச்சி நூல்களைப் பேராசிரியர் சி.இலக்குவனார் எழுதி உள்ளார். ஒவ்வொரு நூலிலும் பேராசிரியரைப் புரட்சிப் போராளியாக அடையாளப்படுத்தும்  கருத்துகளைக் காணலாம்.  “அழுக்கு படிந்த ஒன்றினைத் துடைத்துத் தூய்மையாக்கினால் புதிய ஒன்றாகப் பொலிவுடன் காட்சி அளிக்கும். இதுதான் அதன் உண்மைத் தோற்றம் எனினும் அழுக்கையே பார்த்துப் பழகியவர்களுக்கு இது…

பெரியார் 43-ஆவது நினைவு நாள் – பல்வழி அழைப்புக் கூட்டம்

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா பெரியார் 43-ஆவது நினைவு நாள் பல்வழி அழைப்புக் கூட்டம் பேரா.சுப.வீரபாண்டியன்:  பெரியாரும் இன்றைய தமிழகமும் மார்கழி 08, 2047 / திசம்பர் 23, 2016  அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8.00 முதல் 9.00 வரை அழைப்பு எண் (712)4321500  குறி: 951521# தரவு: சோம.இளங்கோவன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 : ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 29 1.4.  தலைவர் வாழ்த்து பண்டை நாளில் அரசன் பிறந்த நாளில் அவனைப் போற்றிப் புகழ்வது வழக்கம். இதனை, நாள் மங்கலம் என்று சொல்வர். அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன் பிறந்தநாட் சிறப்புரைத்தன்று (பு.வெ. 212) அறத்தை உண்டாக்கும் செங்கான்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது.  இதனைச்,  ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்   பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’ என்று தொல்காப்பியர்…

இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி. – வாலாசா வல்லவன்

இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி.     1955 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தி மொழியை எப்படி எல்லாம் வளர்த்து எடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிய பி.சி.கெர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு இந்தியா முழுவதும் முழுவதும் சென்று கருத்துகளைக் கேட்டறிந்தது.   மார்கழி 27, 1986 / 1956 சனவரி 11ஆம் நாள் அக்குழு முன்பு ம.பொ.சி.  கருத்துரைத்தார் இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்பதைத் தமிழரசு கழகம் ஏற்றுக் கொள்ளுகிறது. மத்திய அரசின் நிருவாக மொழியாகவும், மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும், உச்ச…

திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தும் கொள்கைப் பயிலரங்கம்

சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18, 2016  காலை 9.30 – மாலை 5.30 திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி திராவிடர் விடுதலைக்கழகம்

குறள் வழிச் சென்றால் பெருமையை அடையலாம் – ஈ. வே. இராமசாமி

குறள் வழிச் சென்றால் உலகிற்கு நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை அடையலாம்.   தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் தமிழ்ப் பகைவர்கள். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச்சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும், உலகத்துக்கும்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடையலாம்.   திருவள்ளுவர் இன்றைக்கு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவர் என்பது இன்று பலரும் ஒப்புக்கொண்டுள்ள செய்தி, ஆதலின் அவர்தம் காலத்தில் கிறித்தவம், இசுலாமியம்,…

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! : குடிஅரசு – தலையங்கம்

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே!   உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெயில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்புகளுக்கும் பச்சை இரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற் குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்?   இரட்டைப்…

பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி – கலைஞர்

பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி “இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடிமுழக்கம் கேட்பதுபோல் – திணறிப் போனார் பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம் மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்! பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார். ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் சாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே திரும்பும் வாள்கள் !!” -கலைஞர் மு.கருணாநிதி (1945)

எங்கள் பெரியார் – கவிமதி

எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார் மூடிமறைத்துப் பேச அறியார் மூடப் பழக்கம் எதுவும் தெரியார் நூலார் திமிர் அறுத்த வாளார் நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார் நரியார் தோலுரித்த புலியார் நால்வகை வருணம் கலைத்த கரியார் எளிதாய்க் கடந்து செல்லும் வழியார் ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார் தெளியார் அறிவு நெய்த தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான குறியார் உலகத் தமிழருக்கு உரியார் உணர்ந்தால் விளங்கும் மொழியார் மனு வேதம் கொளுத்திய திரியார் மாதருக்குத் தெளிவான ஒலியார் தேடிப் படிக்க சிறந்த…