தேனிமாவட்டத்தில் பரவி வரும் மருமக்காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி முதலான ஊர்களில் மருமக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை இக்காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். இக்காய்ச்சல் வந்தவுடன் கண்களில் இருந்து நீர் வருதல், கை, கால்கள் சோர்வடைதல், உணவு உண்ணாமை போன்ற உடற்கேடுகள் ஏற்படுகின்றன. மேலும் இக்காய்ச்சல் ஏறத்தாழ 10 நாள்வரை நோய்தாக்கியவர்களைத் தாக்குகிறது. மேலும் தொடர்ச்சியாக இருமல் வருவதால் அண்மையில் உள்ளவர்களுக்கும் இந்தத் தொற்றுநோய் பரவுகிறது. தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்…