மொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் ! – மா. கந்தையா

  மொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் ! பருவுடல்    மறைந்தது ;     திருவுயிர்   மறையவில்லை !   “ஓரினம் அழிக்க அவ்வினம்பேசும் மொழியைஅழி” சிற்றினம் சார்ந்த சிற்றறிவு படைத்தோர் முற்றாக உலகின் முதன்மொழியாம் தமிழைஅழிக்கும் நற்றாயைக்  கொலைசெயும் நரிக்கூட்டச் செயலை   இமிழ்கடல்   ஒலிக்கும்   தமிழ்  மண்ணில் தமிழ்  காக்க   அமிழ்துயிர்   துறந்தோராயிரம் உமிழ்கின்ற   எச்சிலை   உறிஞ்சிவாழ்வோர்  பலராயினும் தமிழெனும்  எச்சத்தைத்  தானெடுத்துஅது   தழைப்பதற்கு   வறுமைக் கோலத்தையும் பெருமைக்கோல மாய்க்கொண்டு தறுகண்  உடைத்த குறுமொழியாம் இந்தியினை மாறுகை மாறுகால்பட சிறுகத்தறித்தசெயலைநாமின்றே…

தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! – மா.கந்தையா

யார்  இவர் ? ! ” தமிழைப்  பழித்தவனை  என்தாய் தடுத்தாலும் விடேன் எதிரிகள்  கோடி  இட்டு அழைத்தாலும்  தொடேன் “ வஞ்சினம்  கூறிய  வாதில்புலவன்  பாவேந்தர் வழிவந்த  மறவன்   தமிழ்அறம்பாடி  வந்தஅறிஞன் ! சங்கத்துமது   ரையில்தமிழைப்  பங்கப்படுத்திப்   பேசிய ஓங்குபுகழ்  அறிஞரெனினும்  ஒவ்வாதசொல்  லைத்தாங்காது தமிழைப்  பழித்தவர்க்கு  தக்கறிவூட்டி கருத்தினை உமிழ்ந்து  தள்ளியதற்கு  ஓர்சான்று   உண்டன்றோ ! விடுதலையான  நம்நாட்டில்  கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி  இந்தியநாடு  சமநிலைகாண  நிதிஅமைச்சராகவும் சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘  பெற்ற ஆர்….

எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா? – இளையவன் செயா

கல்விபடைத்த காமராசரை வாழ்த்துவோம்! பழுத்த  பலாவும்முற்றப்  பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க்  கேட்கிறேன்  பழச்சுவை  ஒன்றாமோ ?  இல்லை கொழுத்தும்  கதிரவனும்  குளுமைதரும்  நிலவும் கோள்கள்தானே இழுத்து  மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும்  ஒன்றாமோ ? அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ ? புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள்  வாழ்வைப் போற்றி வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ ? இல்லை பழுதின்றிப் பூத்த பனிமலரும் கோயில்  கருவறையில் தொழுது  வணங்கத் தொகுத்த மொழியும்  நல்ல முழுத்தத்தில்  முடித்த மணமும்…

இன்றைய நாள் இனிய நாள் – இளையவன் செயா (மா.கந்தையா)

பெரியார்  ஆண்டு 135  தொ. ஆ. 2880  தி.ஆ.2046 ஆடவை ( ஆனி )  30                         15–07–2015 பிறந்த நாள் !                            ஏ …….மனிதா.. …….! ஏறுபோல் பீடுநடைஅன்று எறும்புபோல் ஊறும்நடைஇன்று ஊறுஏதேனும்  உண்டோ   வீறுகொண்ட   மனமே மாறுபடில்லா  அறிவுகேட்டது  மாறுபடும்  மனமோ ஊறில்லா  …

கண்மைகாயு முன்கருகிட்ட கண்மணிகள் ! – – இளையவன் செயா (மா.கந்தையா)

பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880  தி.ஆ.2046    ஆடவை ( ஆனி ) 30                15–07–2015 பத்தோடு  ஓராண்டு பறந்தோடி  விட்டதுகாற்றாய் இத்தரையில்  இன்னா  இனியதறியா   இளம்குருத்துகள் புத்தகமும்  கையுமாய் புத்தறிவுப்  பெறப்போனவர்களை பத்திஎரிந்த  தீநாக்கு பதம்பார்த்து  விட்டதே ! குடந்தைப்  பள்ளியிலே மடந்தையர்பெற்ற  மலர்கள் இடம்விட்டு நகராமலே இதயம் கருகினரே ! குடமளவு  கண்ணீரைக்  கொட்டினரே  மக்கள் தடம்மாறா  நினைவுகளைத் தரணிக்கு அளிப்போம் !  (16–07–2004 ) கருகிய …

கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா

மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்     கண்டீரா  ஓர்  இறும்பூதை ! திருப்பாற்   கடலில்   திருஅமுதம்  எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு  பெருங்கடலைக் கடைந்தனராம் ! கண்டான்வாலி அனைவரையும் கண்ணால் அகலச்செய்து கையால்  கடைந்தான் ;  கடைந்தவரிடம் அமுதம்தந்தானாம்…