“பைந்தமிழ்ச் செம்மல்” விருது புதுவை மு.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பெற்றது

  ஆனி 04, 2047 / 18-06-2016 அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச் சங்கம்,  நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து  வானவில் விழா நடத்தின.   புதுவைத்தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன்  சிறந்தமுறையில் தமிழ்த் தொண்டாற்றி வருவதைப் பாராட்டி இவ் விழாவில் “பைந்தமிழ்ச் செம்மல்” விருது அவருக்கு வழங்கப்பட்டது.    பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.தாமோதரன், சின்னத்திரை நடிகர் கவிஞர். கலைமாமணி அமர சிகாமணி, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க நிறுவனத் தலைவர்…

மொழிமானக் காவலர் தமிழமல்லன் – மு.பாலசுப்பிரமணியன்

  மொழிமானக் காவலர் தமிழமல்லன் தமிழுணர்வு குன்றாத தகையாளர் தன்மானம் நின்றோங்கும் நெறியாளர் உமியாக அயற்சொற்கள் கலப்பதையே உரக்க எதிர்க்கின்ற வீராளர் மல்லனுடை பாக்கள் என்றால் அனல்பறக்கும் நல்லொழுக்கம் கருத்துவளம் அணிவகுக்கும் கன்னலென தேன்பாக்கள் கரும்பினிக்கும் நன்னெறியில் பிறழ்வோரை சுட்டெரிக்கும் மின்சாரம் பாய்ந்ததுபோல் வீச்சிருக்கும் தென்னிலங்கை மண்பெருமை மூச்சிருக்கும் மண்மானம் மொழிமானம் காத்திருக்கும் எதுகையும் மோனையும் எழுந்துநிற்கும் எழுதென்று உவமையெலாம் ஏங்கிநிற்கும் தொடைவந்து தோள்சாய்ந்து காத்திருக்கும் தோதான இடம்கேட்டு பார்த்திருக்கும் படையெடுத்துச் சொல்லெலாம் படியிருக்கும் மடைதிறந்த வெள்ளம்போல் கவிசிறக்கும் பாவேந்தர் புகழ்பரப்பும் பண்பாளர் பாடாற்றி…

புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் விழா

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக  மகளிர் விழா,  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.   விழாவில்  பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர்   புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்   துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு  துணைச்செயலர்…

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்    காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம் எதிர்வரும் மாசி 22, 2047 /  5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது.   இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. ‘கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே’ என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். ‘அறவியல் பாடல்களிலே‘ என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மார்கழி 10, 2046 /  26-12-2015  நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி,செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு,  துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ எனும் தலைப்பில்  கவியரங்கம்…

புறப்படு புறப்படு பேய்மழையே! – மு.பாலசுப்பிரமணியன்

புறப்படு புறப்படு பேய்மழையே! வா வா மழையே என்றழைத்தோம் வந்து கொட்டித் தீர்க்கின்றாய் சாவா வாழ்வா நிலை எமக்கு சற்றே பொறுக்க மாட்டாயா? போய்வா என்றே சொல்கின்றோம் புறப்படு புறப்படு பேய்மழையே! தாய்பிள்ளை முதியவர் தவிக்கின்றார் தாமதம் இனியும் ஏன் மழையே ஊடகம் முழுதும் உன்னாட்சி உயிருக்கு போராடும் நிலையாச்சு நாடகம் ஏனோ பேய்மழையே நலங்கெட பெய்தல் முறையாமோ? எங்கே பேரிடர் என்றாலும் எங்கள் மக்கள் உதவிடுவார் இங்கே வெள்ளம் சூழ்கையிலே எங்கே போவார் எம்மக்கள்? இயற்கையே சீற்றம் குறைத்துவிடு இனியும் வேண்டாம் விளையாட்டு…

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரதாசு சுவாமிகள் விழா

நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா   புதுவைத் தமிழ்ச் சங்கம் நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கார்த்திகை 19அ 2046 / திசம்பர் 05, 2015 அன்றுநடைபெற்றது.   புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத்  துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால்  பொருளர் தி.கோவிந்தராசு, துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள்  ஆகியோர்…

புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலருக்குச் சமூக இலக்கியச் சுடர் விருது

   புதுவைக் கவிதை வானில் கவிமன்றம் சார்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அவரின் சமூக, இலக்கிய பணிகளைப் பாராட்டிச், சமூக இலக்கியச் சுடர் விருது வழங்கப் பட்டது.        விருதினை புதுச்சேரி காவல்துறையின் முதுநிலை கண்காணிப்பாளர் முனைவர் சந்திரன் வழங்கினார்கள். உடன் கவிதைவானில் கவிமன்ற நிறுவனர் திருமதி கலாவிசு, புலவர் இரெ.சண்முவடிவேல், கவிஞர் பைரவி தொழிலதிபர் கணேசன் ஆகியோர் உள்ளனர்

புதுவைத் தமிழ்ச் சங்கம் : மகளிர் நாள்

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக  மகளிர் நாள் விழா விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.     கருத்தரங்கத்தில் புதுவைப் பல்கலைக் கழக தமிழியல் துறைத் தலைவர் முனைவர் இளமதி சானகிராமன், புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன், புதுவை குழந்தைகள் நலக்குழுத் தலைவர் முனைவர் வித்யா இராம்குமார், புதுச்சேரி வாழும் கலை ஆசிரியர் எம்.தையல்நாயகி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.     துணைத்தலைவர்கள்…

உலகத் தாய்மொழிநாள், புதுவைத் தமிழ்ச் சங்கம்

   புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக உலகத் தாய்மொழிநாள் – பாவாணர் பிறந்தநாள் விழா மாசி 16, 2046 / 28-02-2015 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.    புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்றார்    புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை வகித்தார்   புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்…

பரிதியன்பனுக்குத் தமிழ்நிதி விருது

  புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர்   பரிதியன்பன் என்னும் பாலசுப்பிரமணியனுக்குத் ‘தமிழ்நிதி’ விருது விருதாளர் பரிதியன்பன் மேலும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.