(அதிகாரம் 035. துறவு தொடர்ச்சி) 01.அறத்துப் பால்  03.துறவற இயல் அதிகாரம்  036. மெய் உணர்தல்   எப்பொருள் ஆயினும், அப்பொருளின் உண்மையை ஆராய்ந்தும் அறிதல்.   பொருள்அல்ல வற்றைப், பொருள்என்(று) உணரும்,      மருளான்ஆம், மாணாப் பிறப்பு.         பொய்ப்பொருள்களை, மெய்ப்பொருள்கள் என்று        உணர்தல், சிறப்[பு]இல்லாப் பிறப்பு. இருள்நீங்கி, இன்பம் பயக்கும், மருள்நீங்கி,      மா(சு)அறு காட்சி யவர்க்கு.         மயக்கத்தை நீக்கிய ஞானியார்க்கே,        தூயநல் பேர்இன்பம் தோன்றும். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, வையத்தின்      வானம், நணிய(து) உடைத்து….