இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2

(இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2 தொடர்ச்சி) இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2 ?  தமிழ் பேசும் வழக்கம் தமிழர்களின் வீடுகளில் குறைந்துவரும் இந்தக் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டுக்குரிய வேறு செயல்கள் தொடர்ந்து பழக்கத்தில் உள்ளனவா? கோயிலுக்குச் செல்லுதல், திருமணங்களில் சடங்குகள், குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல் போன்றவற்றில் இன்னும் பண்பாட்டு வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தாலும், மெதுவாக அவை மாறிவருகின்றன. தமிழ்ப்பெயர்கள் இப்போது குறைந்து வருகின்றன. ? இந்தோனேசியாவில் தமிழ்வழித்தோன்றல்கள் குறிப்பாக எந்தப் பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறார்கள்?…

வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்

  வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.   இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்….

தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்

  திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்ற முடிவுக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கடவுள் வணக்க வழிபாடுகள் ஆரியர்களுடனான தொடர்பால் ஏற்பட்டது என்ற முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டது. –…

இராணிமேரிக்கல்லூரி, மொழிபெயர்ப்புக்கருத்தரங்கம்

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்  அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்தும் செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம்  சென்னை அறிஞர் போப் அரங்கம் பேராசிரியர் சி.இலக்குவனார்  அரங்கம் பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் அரங்கம் மாசி 13, 14, & 15, 2046 – பிப்ரவரி 25,26 & 27, 201 (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 9

  –    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முன் இதழ்த் தொடர்ச்சி) 5. அரசியல் வாழ்க்கை பிளட்டோ கூறுவதுபோல், மனிதன் இயற்கையிலேயே அரசியல் பொருளாவன். எனவே அரசியல் அவனோடு வளர்கிறது.  ‘மனிதன், தன்னுடைய ஆட்களுடன் கூடவே வளர்கிறான்’ என்பதை அரிசுடாடில் வலியுறுத்துகிறார். எனவே அரசியல் வாழ்க்கை என்பது குமுகாய வாழ்க்கையின் வெளிப்பாடு ஆகும்.  முந்தைய தலைப்பில் இருந்து தொல்காப்பிய காலத் தமிழர்கள் மன்பதை வாழ்க்கையில் முன்னேற்ற நிலையை அடைந்திருமையை உணரலாம். அவர்களின் அரசியல் வாழ்வும் பின்தங்கியதன்று. தொல்காப்பியர் வாழ்க்கையையும் இலக்கியம் போல் அகம்,…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 8

–    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி) பேராசிரியர் எம்.எசு. பூரணலிங்கம்,  “பண்பாடு மிக்க தமிழர் தம் கடவுளை, மேனிலையில் உள்ள கொடிநிலை, பற்றற்றக் கந்தழி, அருள் வழங்கும் வள்ளி என மூவகையாகக் கண்டனர். சுருங்கக்கூறின், தம்மை உருவாக்கி ஆள்பவருக்கு, முதன்மைப் பண்புகளாக எங்கும் உளதாகும் தன்மை, பற்றின்மை, அருள் முதலியவற்றை  எடுத்தியம்பினர் எனலாம்.” (தொல்காப்பியம் பொருளதிகாரம் விளக்கவுரை பக்கம் 335) (தமிழ் இந்தியா பக்கம் 53.) பால்வரைதெய்வம் (பொருள். 57) என்று சொல்வதிலிருந்து, கடவுள் ஊழி்னை…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 6

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   3.9. பல்வேறு வகுப்பினரின் மன்பதைத் தொழிற்பாடுகள்:  ஒவ்வொருவரும் தத்தம் செயற்பாடுகளில் சிறந்து விளங்க எதிர்ப்பார்க்கப்பட்டனர்.  ஒருவர் தன் வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பதற்குத் தெரிவு செய்வதுவே அவரின் இலக்காகின்றது.  தொல்காப்பியர் பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது என  குறிப்பிடுகின்றார். (நூற்பா 74,பொருள்). மன்பதை தொழில்முறையினால் 7 பகுப்பினைக் கொண்டிருந்தது. இவை அறிவர், அரசர், மக்கள், கற்றோர், கலைஞர்கள், மேற்கூறிய பகுப்புகளில் சேராத பிறர்  என்போர் ஆவார் (நூற்பா 75, பொருள்)….

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 5

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.6. விழாக்கள்   குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின.   குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்).  அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டது; மண்ணுமங்கலம் என அழைக்கப்பட்டது(நூற்பா.91,பொருள்). போர்க்களத்தில் வீரர் அடையும் மரணம் சீரும் சிறப்புமாக கொண்டாப்பட்டது.  அவரை மதிப்புச் செய்யும் வகையில்…