தமிழேஅடித்தளமாய் எழுத்தேவேள்வியாய், அமுதசுரபியாய், கலைமகளாய், தான் வணங்கத் தமிழ்த்தாயே மகிழும் வண்ணம் தன் எண்ணம் திண்ணமாய்க் கருத்தில் கொண்டே எண்பதிலும் எழுதுகிறார் இளமையாய்க் கலைகள் கொண்டு ஏணியாய்த் தானிருந்து எழுத்தாளர் பலர் தமையே ஏற்றிவிட்டார் எழுத்தால் வாழுகின்ற எண்ணற்ற நலிந்தோர்க்கு இப்போதும் உதவுகின்றார் எட்டாத புகழில்லை, விருதுமில்லை என்றாலும் அயராத ஆர்வமென்னும் நெய் ஊற்றி எழுத்தென்னும் விளக்கேற்றி மகிழ்கின்றார் எண்ணுகின்ற அற்புதங்கள் கைவசமாய்த் தான் கொண்டு கையெழுத்தாய் வடிக்கின்ற வித்தகராம் திருவிக்ரமன் இயலிசை நாடகமாம் முத்தமிழும் கலந்தே வாழும் வித்தகராம் திரிவிக்ரமன் வேம்பு என்னும்…