ஓவியக்கலை – விபுலானந்த அடிகள்

ஓவியக்கலை ஓவு என்னும் சொல்லுக்கு “அழகு பொருந்துமாறு செய்தல்” அல்லது “ஒன்றைப்போல எழுதுதல்” என்னும் பொருள். இதனடிப்படையில் ஓவி என்னும் சொல் ஓவியத்தைக் குறித்துள்ளது. பின்னர் அம் என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து ஓவம் என்பது ஓவியத்தைக் குறித்துள்ளது. ஓவு அர் ஓவர் என்பது ஓவியரைக் குறித்துள்ளது. ஓவி அம் ஓவியம் என்னும் சொல்லாட்சி பின்னர் நடைமுறையில் வந்துள்ளது. ஓவியத்தை வரைபவர் பின்னர் ஓவியன் அல்லது ஓவியர் எனப்பெற்றனர். நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று மூலவடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறந்தன. எல்லா வகையான…

பிற நாடுகளில் யாழ்க் கருவி

  நமது நாட்டிற் போலவே வேறு பல நாடுகளிலும் யாழ்க்கருவி தெய்வமாகப் போற்றப்பட்டது. பண்டை நாளிலே சீரும் சிறப்பும் எய்தியிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீக கடற்கரையிலிருந்து அழிந்து போன சுமேரியா நாட்டிலும், சோழர் குடியேறினமையாலே சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே சால்தேயா என வழங்கப்பட்ட தொல்பதியினிலும், சேரர் குலத்தார் கலத்திற் சென்று வெற்றி பெற்றுத் தம்மாணை செலுத்திய கிரேக்கத் தீவிலும், அதற்கணித்தாகிய யவனபுரத்திலும், உரோமர் வருவதற்கு முன்பழைய இத்தாலி தேசத்திலும், ஐபீரியா எனப்பட்ட பழைய இஃச்பெயின் சேத்திலும்,…