உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! சண்டாளக் காசுவந்து செந்தமிழர் ஒற்றுமையைத், துண்டாடிக் கூசாமல் வெந்தழித்து நாசமாக்க, வண்டாடுஞ் சோலைகளும் வாவிகளும் செத்துவீழ, அன்றாடச் சோற்றுக்கு அல்லாடித் திரிந்தாலும், பங்காளிச் சண்டையிலே பகுத்தறிவை இழந்து, இரண்டாக நிற்கின்ற என்னன்புத் தமிழா! குண்டூசி அளவேனும் சிந்தித்துப் பாரடா! முண்டாசுக் கவிஞன் சொன்ன சொற்களை மறந்தாய், மண்டூகப் பேய்களுக்கு வாக்களித்து ஒழிந்தாய்! திண்டாடிச் சீரழியும் தமிழினத்தின் நிலைமைக்கு, என்றேனும் காரணம்யார் என்றெண்ணிப் பார்த்தாயா? வெண்டாக உடல்வெடித்து ஓடாகத் தேய்ந்தாலும், என்போடு சதையொட்டி கூடாக ஆனாலும், “என்பாடு” இதுவல்ல என்று…